பதிவு செய்த நாள்
04
ஆக
2017
12:08
தேனி: ஆடிப்பெருக்கை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதி கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஆற்றங்கரையில் பெண்கள் தாலிக்கயிறு மாற்றி வழிபட்டனர். தேனி அருகே வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், முல்லை ஆற்றங்கரை, பி.சி.பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வர் கோயிலில் ஆடிப்பெருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பெண்கள் இல்வாழ்க்கை நிலைத்திருக்க வேண்டி திருமாங்கல்யம் சரடு மாற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. தேனி வேல்முருகன் கோயில், ெபத்தாட்சி விநாயகர் கோயிலும் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமானோர பங்கேற்றனர்.
கம்பம்: ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்று சுருளி அருவியில் ஏராளமானோர் குளித்தனர். அதிகாலை முதல் மக்கள் கூட்டம் வரத் துவங்கியது. அருவியில் குளிப்பதற்கு நேரம் ஆக ஆக நெரிசல் ஏற்பட்டது. அருவியில் குளித்துவிட்டு பூதநாராயணர், வேலப்பர் கோயில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் பங்கேற்றனர். விபுதி குகை, கைலாசநாதர் குகையிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. ஆதிஅண்ணாமலையார் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. சிவனடியார் முருகன் சுவாமிகள் பூஜைகள் செய்தார். கோடிலிங்கம் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
* உத்தம்பாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காளாத்தீஸ்வர்–ஞானாம்பிகைக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. கோயிலிற்கு எதிரில் ஓடும் முல்லையாற்றில் பெண்கள் விளக்குகள் விட்டு வழிபாடு செய்தனர்.
* கம்பம் கம்பராயப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. சாமாண்டியம்மன் கோயில், கவுமாரியம்மன் கோயில், வேலப்பர் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளிலும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
போடி: இந்த ஆண்டு கொட்டகுடி ஆற்றில் தண்ணீர் இல்லாததால், ஆடிப்பெருக்கு களையிழந்து காணப்பட்டது. போடி காசிவிஸ்வநாதர் கோயில் ராணிப்பண்ணை நிர்வாகத்தினர் தண்ணீர் ஏற்பாடு செய்திருந்தனர். பெண்கள் குடத்தில் தண்ணீர் பிடித்து கொண்டு ஆற்றுப்பகுதியில், சிறப்பு அலங்காரத்தில் மஞ்சள் மாவினால் ஆன அம்மன் சிலைகள் செய்து வழிபட்டினர். மஞ்சள் நுாலில் தாலி நுால் மாற்றி கொண்டனர். இங்குள்ள காசிவிஸ்வநாதர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
* போடி அருகே பிச்சாங்கரை மலைப்பகுதியில் கயிலாய கீழச்சொக்கநாதர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேம், தீபாரதானைகள் நடந்தது. ஏற்பாடுகளை போடி ஜமீன்பரம்பரையை சேர்ந்த பாண்டி சுந்தரபாண்டியன் செய்திருந்தார்.
* போடி பரமசிவன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை, அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் தலைமையில் நடந்தது.
* மேலச்சொக்கநாதர் கோயில், கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயில், சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
* போடி கீழத்தெரு, மேலத்தெரு சவுடம்மன் கோயில், குலாலர்பாளையம், நந்தவனம் காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது.
* போடி சீனிவாசப்பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.-
பெரியகுளம்:பெரியகுளம் பகுதிகளில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஏராளமான கோயில்களில் சிறப்பு பூஜைகள், குலதெய்வம் வழிபாடுகள் நடந்தது. பெரியகுளம் பகுதிகளில் ஆடி 18ம் பெருக்கை முன்னிட்டு கோயில்கள் மற்றும் வீடுகளில் பெண்கள் குழுக்களாக சேர்ந்து, தங்களது கணவருக்கு தீர்க்க ஆயுள் வேண்டி புதிதாக தாலிக் கயிறுகள் கட்டிக்கொண்டனர். பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில், வரதராஜப்பெருமாள் கோயில், முப்பிடாரிஅம்மன் கோயில், கவுமாரியம்மன் கோயில், பாம்பாற்று பக்த ஆஞ்சநேயர் கோயில், கம்பம்ரோடு காளியம்மன் கோயில், கைலாசபட்டி கைலாசநாதர் கோயில், கிருஷ்ணவேணி அம்மாள் கோயில், வீச்சு கருப்பணசாமி கோயில், சச்சுமடை பாண்டி முனீஸ்வரர் கோயில், தாமரைக்குளம் சீலைக்காரி அம்மன், வடுகபட்டி மலைமேல் முனியாண்டி கோயில் மற்றும் காட்டுக்கோயில்களில் பூஜை, குலதெய்வம் வழிபாடுகள் நடந்தது. தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலில் பக்தர் கள் வருகை அதிகமாக இருந்தது. அம்மனுக்குசிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது. கிராமங்களில் உள்ள பங்காளிகள் கோயில்களில் பெட்டிகள் அலங்கரித்து பூஜைகளில் ஈடுபட்டனர்.