இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி கடைசி வெள்ளி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2017 09:08
சாத்தூர்: சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிக்கடைசி வெள்ளிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இக்கோயில் கடைசி வெள்ளி விழா ஆக. 11ல் நடக்க உள்ளது. இதையொட்டி கொடி மரத்திற்கு பட்டர்கள் சிறப்பு அபிஷேகம் செய்ய கொடியேற்றி பூஜைகள் செய்தனர். பக்தர்கள் ஒம் சக்தி, பராசக்தி கோஷமிட்டனர். கோயில் முன்பு பக்தர்கள் பொங்கல் ,மாவிளக்கு ,அக்னிசட்டி, ஆயிரங்கண்பானை , அங்கபிரதட்சணம் செய்து வழிபட்டனர். செயல்அலுவலர் வில்வமூர்த்தி,பரம்பரை அறங்காவலர் குழு முன்னாள் தலைவர்கள் ராஜேந்திரன் பூஜாரி,ராமமூர்த்திபூஜாரி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன.