பதிவு செய்த நாள்
14
ஆக
2017
02:08
திருத்தணி: முருகன் கோவிலில், 14 நாட்களில், 24.89 லட்சம் ரூபாயை, பக்தர்கள் உண்டியலில் செலுத்தி உள்ளனர். திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், மலைக்கோவிலுக்கு வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். அப்போது பக்தர்கள், தங்கள் வேண்டுதலை, ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக உண்டியலில் செலுத்துகின்றனர். அந்த வகையில், 14 நாட்களில், பக்தர்கள் செலுத்திய காணிக்கை, உண்டியலை திறந்து நேற்று முன்தினம் எண்ணப்பட்டது. இதில், 24.89 லட்சம் ரூபாய், 77 கிராம் தங்கம், 3,988 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.