பதிவு செய்த நாள்
14
ஆக
2017
02:08
சேலம்: செவ்வாய்ப்பேட்டையில் நடந்த வண்டி வேடிக்கை, பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. ஆடிப்பண்டிகையையொட்டி, சேலம், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவிலில், நேற்று இரவு, வண்டி வேடிக்கை நடந்தது. செவ்வாய்ப்பேட்டை சந்தைப்பேட்டையில் தொடங்கி, தேர்வீதி வரை நடந்த வண்டி வேடிக்கையில், அணிவகுத்த ஒன்பது அலங்கார வண்டிகள், பக்தர்களை வெகுவாக கவர்ந்தன. காவிரியை தந்த கணநாதன் விநாயகர், அகத்திய முனிவர், நாரதர் அலங்காரம், தத்ரூப காட்சியாக அமைந்திருந்தது. சிவன், பார்வதி, விநாயகர், புலி வாகனத்தின் மீது அமர்ந்தபடி ஐயப்பன் அம்பு தொடுக்கும் காட்சி, அர்ந்தநாரீஸ்வரர், கருப்பண்ண சாமி, துரியோதனர் சபை, சிவசக்தி, ராவணன் தர்பார், மூன்று அம்மன்கள் அருள்பாலித்த காட்சி, கன்னிகா பரமேஸ்வரி ஆகியவை பார்வைக்கு பரவசமூட்டின. நிறைவில், முதல் மூன்று இடங்களை பிடித்த வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.