பதிவு செய்த நாள்
21
ஆக
2017
12:08
விழுப்புரம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விழுப்புரம் அருகே அய்யூர் அகரம் கிராமத்தில் பல வடிவங்களில் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வரும் 25ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இதையொட்டி, விழுப்புரம் அருகே அய்யூர் அகரம் கிராமத்தில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கும் பணி துவங்கியுள்ளது. இங்கு, 4 அடி முதல் 20 அடி வரை விநாயகர் சிலைகள் பாகுபலி, யானை சிங்கம், கமலம், டைனாசூரஸ், உள்ளிட்ட வடிவங்களில் தயாரிக்கும் பணிகள் ஜரூராக நடந்து வருகின்றது. இங்கு தயாரிக்கப்படும் சிலைகள் 750 ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. இதேபோல், பெங்களூரு, விஜயவாடா, கிருஷ்ணகிரி, மும்பை, ைஹதராபாத் மாநிங்களில் இருந்து ஏற்றுமதிக்கான ஆர்டர்களின் பேரில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விழுப்புரம் அருகே அய்யூர் அகரம் கிராமத்தில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கும் பணிகள் கலைகட்டியுள்ளது.