புரட்டாசி தேய்பிறை ஏகாதசிக்கு ‘அஜா ஏகாதசி என்று பெயர். கவுதம முனிவரின் ஆலோசனைப்படி, அரிச்சந்திரன் ஏகாதசி விரதமிருந்து இழந்த ராஜ்யத்தை மீண்டும் அடைந்தான். இழந்த சொத்தை மீட்க, குடும்பத்தைப் பிரிந்தவர்கள் சேர்ந்து வாழ இந்த நாளில் (அக்.15) விரதம் இருக்கலாம். புரட்டாசியில் ஏகாதசியன்று விரதம் இருப்பவர்கள், உணவில் தயிர் சேர்க்க கூடாது.