Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் 10ம் தேதி 2 மணி நேரம் ... 40 அடி உயர முருகன் சிலை ஊட்டியில் பிரதிஷ்டை! 40 அடி உயர முருகன் சிலை ஊட்டியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்மநாப சுவாமி கோவிலில் 58 கேமராக்கள் பொருத்தி 24 மணி நேரமும் கண்காணிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 டிச
2011
11:12

திருவனந்தபுரம் : பாதுகாப்பு கருதி, பத்மநாப சுவாமி கோவிலில் உள்ளும், புறமும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணிகள் துவங்கியுள்ளன. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில், பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள அரிய பொக்கிஷங்கள் உள்ளன. இதனால், அங்கு பாதுகாப்பை பலப்படுத்த, மாநில அரசுக்கும், கோவில் நிர்வாக அறக்கட்டளைக்கும், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. மேலும், பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய, ஐவர் கமிட்டியையும் நியமித்தது. மதிப்பீடு பணிகள் துவங்குவதற்கு முன், கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டிய நிலை உள்ளது. கோவிலுக்கு, தற்போது 24 மணி நேரமும் செயல்படும், மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையடுத்து அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டு, முதல் கட்டமாக, 360 டிகிரி வரை சுழன்று, கோவிலின் பல்வேறு பகுதிகளை கண்காணிக்கவல்ல, அதிநவீன 58 கேமராக்கள் கோவிலில் பொருத்தப்பட்டுள்ளன. பத்ம தீர்த்தக்கரை, சுற்றுச் சுவர்கள், கோவிலின் நான்கு வாயில்கள், சீவேலி (உற்சவ மூர்த்தி கோவிலிலுக்குள் வலம் வரும் நிகழ்ச்சி) பிரகாரம், நாலம்பலம், பொக்கிஷங்கள் உள்ள அறைகள் போன்றவற்றில், கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும், கோவிலின் மேற்கு பகுதியில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடனும் இணைக்கப்பட்டு, கோவிலின் முக்கிய பகுதிகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கோவிலுக்குள் நுழையும் அனைவரும், தரிசனம் முடிந்து வெளியேறும் வரை, அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டு, ஒரு மாதம் வரை பாதுகாக்கப்படும். கேமராக்களை பொருத்தி, தொழில்நுட்ப வசதிகளையும், பராமரிப்பையும் கெல்ட்ரான் நிறுவனம் வழங்கியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar