திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில், வாமனர் வெண்ணைகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்க பகவான் சிறிய உருவில் வாமனராக அவதரித்து‚ பின்னர் உலகளந்த பெருமாளாக விஸ்வரூபம் எடுத்தார். ஆவணி திருவோணத்தை முன்னிட்டு, திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள வாமனருக்கு திருமஞ்சனம், வெண்ணைகாப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு மகா திருமஞ்சனம்‚ மாலை 5:00 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரத்தில், தீபாராதனை நடந்தது. ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில், விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், செய்திருந்தனர்.