ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தக்கட்டங்களுள் ஒன்று மட்டும் காயத்ரி தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் என்று மூன்று பகுதியாகப் பிரிக்கப்பட்டிருக்கும். காயத்ரி, சாவித்திரி ஆகிய இருவரும் சரஸ்வதியின் அம்சமானவர்கள் என்பதால் மூன்று தீர்த்தமே ஒரே தீர்த்தமாகக் கருதப்படுகிறது. மாணவர்கள் இந்தத் தீர்த்தத்தில் நீராடினால் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதிகம்.