சபரிமலை: சபரிமலையில் புரட்டாசி மாத பூஜைகள் தொடங்கியது.புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது. மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும், தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு ஐயப்பனுக்கு பல்வகை அபிஷேகம் நடத்திய பின்னர் நெய் அபிஷேகத்தை தொடங்கி வைத்தார். நெய் அபிஷேகம் செப்.21-ம் தேதி வரை, தினமும் காலை 5:30 முதல் 11:30 மணி வரை நடைபெறும். எல்லா நாட்களிலும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடைபெறும். தினமும் 12:30 மணிக்கு உச்சபூஜைக்கு முன்னோடியாக களபாபிஷேகம் நடைபெறும். செப்.21-ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.