பதிவு செய்த நாள்
18
செப்
2017
11:09
போடி: போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லையசுவாமி கோயிலில், பிரதோஷத்தை முன்னிட்டு ஏலப்பழம் அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சிவனின் அருளாசி பெற்றனர்.
* போடி அருகே பிச்சாங்கரை மலைப்பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், சித்தர்களால் கட்டப்பட்ட கயிலாய கீழச்சொக்கநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேம், தீபாராதனைகள் நடந்தது. சிவனுக்கு சிறப்பு அலங்காரங்களை போடி ஜமீன்பரம்பரையை சேர்ந்த பாண்டி சுந்தரபாண்டியன் செய்திருந்தனர். விழாவினை யொட்டி ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.* மேலச்சொக்கநாதர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேம், தீபாராதனைகள் நடந்தன.* போடி பரமசிவன் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் கோயில் அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் தலைமையில் நடந்தது.
* போடி சுப்பிரமணியர் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன.