பதிவு செய்த நாள்
18
செப்
2017
12:09
மேட்டூர்: மஹாபுஷ்கரத்தை முன்னிட்டு, மேட்டூர் காவிரி கரையோரம், நேற்று யாகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்கள் காவிரியாற்றில் புனித நீராடினர். மஹாபுஷ்கரத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டம், மேட்டூர் எம்.ஜி.ஆர்., பாலம் அடிவாரம் உள்ள காவிரி கரையோரம் மஹா புஷ்கரம் விழா கொண்டாடப்பட்டது. சேலம், ராஜராஜேஸ்வரி மஹிளா சமாஜம் யோகினி சிவாம்பா தலைமையில், கணபதி ?ஹாமம், சங்கல்பம் செய்து, காவிரிக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. விழா கமிட்டி தலைவர் ஆத்மானந்த சரஸ்வதி, கிராம கோவில் பூசாரிகள் நல பேரவை சேலம் மாவட்ட செயலாளர் ரமேஷ் உள்பட சாதுக்கள், ஆஸ்ரம நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர். சேலம் மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள், குடும்பத்துடன் மேட்டூர் காவிரியாற்றில் புனித நீராடினர். மதியம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.