Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மஹாபுஷ்கரத்தை முன்னிட்டு மேட்டூர் ... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிலைகள் தூய்மைப்பணி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்மநாப சுவாமியை தரிசிக்க பாடகர் யேசுதாஸ் விண்ணப்பம்
எழுத்தின் அளவு:
பத்மநாப சுவாமியை தரிசிக்க பாடகர் யேசுதாஸ் விண்ணப்பம்

பதிவு செய்த நாள்

18 செப்
2017
12:09

திருவனந்தபுரம்: கர்நாடக இசைக் கலைஞர், கே.ஜே.யேசுதாஸ், திருவனந்தபுரத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய அனுமதி கோரி, கோவில் நிர்வாகத்திடம் விண்ணப்பித்துள்ளார். கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில், பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஹிந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

இந்நிலையில், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த, கர்நாடக இசைக்கலைஞரும், பிரபல பின்னணி பாடகருமான, கே.ஜே.யேசுதாஸ், பத்மநாப சுவாமி கோவிலில் வழிபட அனுமதி கோரி, கோவில் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, கோவில் நிர்வாகிகள் கூறியதாவது: கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த யேசுதாஸ், ஹிந்து மதத்தில் தனக்குள்ள ஆழ்ந்த பற்றை விளக்கிக் கூறி, பத்மநாப சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார். செப்., 30ம் தேதி, விஜயதசமி தினத்தன்று, கோவிலுக்கு வர திட்டமிட்டுள்ளதாக, அவர் கூறிஉள்ளார். கோவில் வழக்கப்படி, ஹிந்து மதத்தில் நம்பிக்கை உள்ள எவரும், பத்மநாப சுவாமியை தரிசனம் செய்து வழிபடலாம். எனவே, அவர், கோவிலுக்கு வருவதில் தடை இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar