பதிவு செய்த நாள்
23
செப்
2017
01:09
பென்னாகரம்: பென்னாகரம் அடுத்துள்ள, நெருப்பூர் முத்தத்திராயன் கோவில் கிரிவல பாதையை, சரி செய்ய வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகாவிற்கு உட்பட்ட, நெருப்பூர் அருகே முத்தத்திராயன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. சந்தனமர கடத்தல் வீரப்பன் வழிபட்டு வந்ததால், அக்கோவிலை வீரப்பன் கோவில் என்றும் அழைப்பர். இங்கு மாதந்தோறும், அமாவாசை அன்று தர்மபுரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏாரளமான பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். பென்னாகரம், மேட்டூர் சுற்றுவட்டார பகுதியில் விரதமிருந்தம், மாலை அணிந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். சுவாமி சிலையை தாக்கி, பக்தர்கள் கோவிலை சுற்றிலும் வலம் வருகின்றனர். அப்போது பக்தர்கள் கிரிவல பாதையில் படுத்து, சுவாமி சிலை தங்களை தாண்டி செல்லும் போது, தங்கள் மீதுள்ள தீய சக்திகள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில் அங்குள்ள கிரிவலபாதை மோசமாகி, ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம், பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு கிரிவலப்பாதையை சீரமைக்க வேண்டும்.