Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news 17ம் நூற்றாண்டு கல்வெட்டு செஞ்சி ... திருப்பாதிரிப்புலியூரில் காயத்ரி தேவி ஜெயந்தி விழா திருப்பாதிரிப்புலியூரில் காயத்ரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகளந்த பெருமாள் கோவிலில் திருப்பாவாடை தளிகை படையல்
எழுத்தின் அளவு:
உலகளந்த பெருமாள் கோவிலில் திருப்பாவாடை தளிகை படையல்

பதிவு செய்த நாள்

25 செப்
2017
12:09

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் தேகளீச பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகாலை 4:30 மணிக்கு மூலஸ்தானத்தில் திருவிக்ரமன் விஸ்வரூபதரிசனம், 5:30 மணிக்கு திருப்பாவை சாற்றுமறை, காலை 7:30 மணிக்கு நித்யதிருவாராதனை நடந்தது.

காலை 9:00 மணிக்கு ஸ்ரீ தேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் கண்ணாடி அறை மண்டபத்தில் எழுந்தருளி விசேஷ திருமஞ்சனம், பகல் 12:30 மணிக்கு  சிறப்பு அலங்காரத்தில், திருக்கல்யாண வைபவம் நடந்தது. தொடர்ந்து திருப்பாவாடை தளிகை படையலிட்டு, மகா தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு 8:30 மணிக்கு சேவை சாற்றுமறை, 9:30 மணிக்கு சுவாமி ஆஸ்தானம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடந்த இவ்விழாவில், தொழில் அதிபர்கள் கார்த்திகேயன் சிவக்குமார் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருத்தேர் உற்சவம்: மேல்தாங்கல் திருவத்திமலை வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி தேர் பவனி நடந்தது. செஞ்சி  தாலுகா, மேல்தாங்கல் திருவத்திமலை ஸ்ரீதேவி, பூதேவி,  சமேத வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி உற்சவ விழா நடந்தது. இதை முன்னிட்டு  கடந்த 20ம் தேதி கருடக்கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. மறுநாள் பெரிய  திருவடி எனும் கருடசேவை உற்சவமும், 22ம் தேதி சாமி கோவில் உலாவும், பட்டி  மன்றமும் நடந்தது. நேற்று காலை புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு  ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாஜலபதிக்கு சிறப்பு திருமஞ்சனமும், காலை 10:00  மணிக்கு சிறப்பு பஜனையும், 11:00 மணிக்கு கோவில் வளாகத்தில் திருத்தேர்  பவனியும் நடந்தது. மாலை மேல்தாங்கல் கிராமத்தில் சாமி வீதி உலா நடந்தது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை வெங்கடாஜலபதி திருக்கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar