திருப்பதி பிரம்மோற்சவம்: மோகினி கோலத்தில் ஸ்ரீவி., ஆண்டாள் மாலை அணிந்து சுவாமி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2017 12:09
திருப்பதி: திருமலை திருப்பதியில் நடந்துவரும் பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளான இன்று (27ம் தேதி) உற்சவரான மலையப்பசுவாமி மோகினி திருக்கோலத்தில் எழுந்தருளினார். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து கிளிகள் தாங்கியிருந்தார்.
திருமலை திருப்பதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 23ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றுவருகிறது. முக்கிய நிகழ்வான கருட சேவை செப்டம்பர் 27ம் தேதியும், தேரோட்டம் 30ம் தேதியும் நடக்கிறது. அக்டோபர் 1ம் தேதி காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறவுள்ளது. விழாவின் 5ம் நாளில் உற்சவரான மலையப்பசுவாமி மோகினி திருக்கோலத்தில் எழுந்தருளினார். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து கிளிகள் தாங்கியிருந்தார். ஐந்தாம் நாள் விழாவில் தமிழக கலைக்குழுவினர் பங்கேற்றனர்.