Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாளை (செப்.28ல்) நவராத்திரி எட்டாம் ... ’அரிச்சுவடி’ ஆரம்பம்: களைகட்டும் முன்பதிவு ’அரிச்சுவடி’ ஆரம்பம்: களைகட்டும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1 லட்சம் பொம்மைகளுடன் பிரமாண்ட நவராத்திரி கொலு
எழுத்தின் அளவு:
1 லட்சம் பொம்மைகளுடன் பிரமாண்ட நவராத்திரி கொலு

பதிவு செய்த நாள்

27 செப்
2017
01:09

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் ஒரு வீட்டில், ஒரு லட்சம் பொம்மைகளுடன் பிரமாண்ட கொலு அமைக்கப்பட்டுள்ளது. அசுரர்கள் வதம் செய்யப்பட்டதை, நினைவு கூரும் வகையில், ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. மஹாளய அமாவாசைக்கு அடுத்த நாள் துவங்கும் நவராத்திரி விழா, சரஸ்வதி பூஜை அன்று நிறைவு பெறும். இந்த நவராத்திரி விழாவில், ஒவ்வொரு இல்லத்துக்கும் தெய்வங்கள் வந்து, அருள்பாலிப்பதாக நம்பிக்கை என்பதால், கொலுவில் அனைத்து தெய்வங்களின் உருவ பொம்மைகளும் வைத்து, மக்கள் வழிபாடு நடத்துவர். கும்பகோணம் அய்யங்கார் தெருவில் வசிக்கும் மோகன் - மீனாட்சி தம்பதி, 27 ஆண்டுகளாக, தங்கள் வீட்டில் கொலு அமைத்து வருகின்றனர். இந்த ஆண்டு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொம்மைகளை வைத்து, வீட்டின் வரவேற்பறை, கூடம், பூஜையறை, மாடி ஆகிய இடங்களில், 700 சதுர அடி பரப்பளவில் கொலு அமைத்துள்ளனர்.

மோகன் - மீனாட்சி தம்பதி கூறியதாவது: ஆண்டுதோறும், கும்ப கோணம் கருப்பூரில் பொம்மைகளை வாங்கி விடுவோம். வெளியூர் சென்றால், அங்கும் பொம்மைகளை வாங்கி வருவது வழக்கம். இந்தாண்டு கொலுவில், 151 வகையான விநாயகர், 108 சிவலிங்கம், திருப்பதி மலை என, 2 அங்குலம் முதல், 4 அடி வரை, கொலு பொம்மைகள் அமைத்து உள்ளோம். இந்த கொலுவை அமைக்க, நான்கு நாட்கள் ஆனது. தினமும் அருகில் உள்ள வர்கள், வந்து பார்த்து செல்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar