நவராத்திரி எட்டாம் நாளில் மதுரை மீனாட்சி மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் காட்சி தருகிறாள். மகிஷாசுரன் பிரம்மாவிடம் பெண்ணைத் தவிர வேறு யாராலும் தனக்கு அழிவு வரக் கூடாது என்ற வரம் பெற்றான். தவ வலிமையால் தேவர்களை துன்புறுத்தினான். தேவர்கள் மும்மூர்த்திகளை சரணடைந்தனர். அவர்கள் ஆதிபராசக்தியை தஞ்சமடைவதே வழி என ஆலோசனை கூறினர். தேவர்கள் அம்பிகையை வணங்கினர். அம்பிகையும் உக்கிர துர்க்கையாக மாறினாள். சூலாயுதத்தை சிவனும், சங்கு, சக்கரத்தை விஷ்ணுவும், கமண்டலம், தாமரை மலரை பிரம்மாவும் அம்பிகைக்கு வழங்கினர். சிங்க வாகனத்தின் மீது அமர்ந்த துர்க்கை, மகிஷாசுரனுடன் போரிட்டு வென்று மகிஷாசுரமர்த்தினி என்ற பெயர் பெற்றாள். மகிஷாசுரமர்த்தினியை தரிசித்தால் தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
நைவேத்யம்: பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை
பாட வேண்டிய பாடல் தஞ்சம் பிறிதில்லை ஈதல்ல தென்றுன் தவநெறிக்கே நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நீள்சிலையும் அஞ்சம்பும் இக்கு அலர் ஆகநின்றாய் அறியார் எனினும் பஞ்சஞ்சும் மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே.