அரபுநாட்டில் இப்னு அப்பாஸ் (ரலி) என்பவர் வசித்தார். தனது தோழர்களின் செயல்பாட்டால் வெறுப்பு அடைந்து காட்டிற்கு சென்றார். மக்களை விட, காட்டிலுள்ள மிருகங்கள் மேல் என பழகி வந்தார். அங்கு வந்த வெள்ளையர்கள் இவரை சிறைப்படுத்தி தராபலுஸ் என்ற இடத்துக்கு இழுத்துச் சென்று, அகழி வெட்டும் பணியில் ஈடுபடுத்தினர். இதை விட, தவறு செய்யும் நண்பர்கள் செய்யும் வேதனையே மேல் என அப்பாஸுக்கு தோன்றியது. இந்நேரத்தில், ஹலபு என்ற ஊரில் இருந்து ஒரு பணக்காரர் வந்தார். அவருக்கு அப்பாஸைத் தெரியும். வெள்ளையர்களிடம் பத்து தினார் பணம் கட்டி, அப்பாஸை விடுவித்தார். தன் மகளுக்கு திருமணம் செய்து வைத்தார்.சிலநாட்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர் தம்பதியர். திடீரென தன் பணக்கார புத்தியைக் காட்டினாள் அந்தப் பெண். “என் தந்தையால் விலைக்கு வாங்கப்பட்ட அடிமை தானே! நான் சொல்வதைக் கேள்,” என்றாள்.இப்படி சிரமப்படுவதற்கு பதிலாக, அகழி வேலையிலேயே இருந்திருக்கலாமோ’ என நினைத்தார் அப்பாஸ். நமக்கு வரும் கஷ்டங்களை பெரிதாக நினைக்கக் கூடாது. ஒரு கஷ்டத்தில் சிக்கியிருக்கும் போது, இன்னொரு பெரிய கஷ்டம் வந்தால், பழைய கஷ்டம் எளிதாகி விடும். எனவே, எல்லா கஷ்டங்களையும் எளிமையாய் எடுத்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள்.