ஒருமுறை நாயகத்திடம் அவரது தோழர்கள் “நாங்கள் யார் விஷயத்தில் வாய்மையுடன் நடந்து கொள்வது?” என்றனர். அதற்கு, “அல்லாஹ்வுக்கும் அவனுடைய துாதருக்கும், அவனது திருமறைக்கும், பொதுமக்களுக்கும் நலம் நாடுவதே வாய்மையுடன் நடந்து கொள்வதாகும்,” என்று பதிலளித்தார். வாய்மை மற்றும் நலம் நாடுவதை நஸீஹத்’ என்னும் அரபு சொல்லால் குறிப்பார்கள். மோசடி, நம்பிக்கை துரோகம், போலி, கலப்பு ஆகிய சொற்களுக்கு எதிரான பொருளைத் தரும் சொல்லாக இது கையாளப் படுகிறது. இந்த வார்த்தையை, உண்மையான நம்பிக்கை, உள்ளத்துாய்மையுடன் நலம் நாடல்’ என்றும் மொழி பெயர்க்கலாம். அல்லாஹ் மீது வாய்மையுடன் நம்பிக்கை கொண்டிருப்பதை இந்தச் சொல் குறிக்கிறது. முஸ்லிம் கூட்டமைப்பை நிர்வகிக்கும் பொறுப்பாளர்கள் மீது நம்பிக்கையுடன் நடந்து கொள்வது, அவர்கள் மீது அன்பு செலுத்துவது ஆகியவற்றின் பொருளும் இதுவே. அவர்களுடன் அழைப்புப் பணியின் விஷயங்களிலும், நிர்வாக விஷயங்களிலும் ஒத்துழைக்க வேண்டும்.