பதிவு செய்த நாள்
07
அக்
2017
10:10
மணலிபுதுநகர் : மணலிபுதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி, 10 நாள் புரட்டாசி திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. சென்னை, மணலிபுதுநகரில், பழமை வாய்ந்த, அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி, புரட்டாசி மாத திருவிழாக்களுக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். இந்தாண்டு, புரட்டாசி மாத, 10 நாள் திருவிழா, நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை, 6:30 மணிக்கு, அய்யா, ஹரஹர சிவ சிவ என்ற முழக்கத்துடன், கொடியேற்றம் நடைபெற்றது. நேற்று இரவு, காளை வாகனத்தில் அய்யா, பதிவலம் வருதல் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து, விழா நடக்கும் 10 நாட்களிலும், இரவு நேரங்களில், அன்னம், கருடன், மயில், ஆஞ்சநேயர், சர்ப்பம், மலர்முகசிம்மாசனம், குதிரை, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில், அய்யா பதிவலம் வருவார்.