பதிவு செய்த நாள்
07
அக்
2017
12:10
திருச்செங்கோடு: திருச்செங்கோடு, கைலாசநாதர் கோவிலில், பக்தர்கள் வழிபாடு செய்ய நிற்கும் இடத்திலேயே, அர்ச்சகர்கள் சாப்பிடுவதால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர். திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் துணை கோவிலான, கைலாசநாதர் கோவில், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ளது. தினமும், உள்ளூர், வெளியூர் பக்தர்கள் வழிபட்டு செல்வர். பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி அம்மன் வழிபாடு உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்வர். கைலாசநாதர் சன்னதி, சுகுந்த குந்தலாம்பிகை சன்னதி ஆகியவற்றில், கர்ப்பகிரகத்தில் இறை வழிபாடு செய்ய பக்தர்கள் நிற்பர். அந்த, வழிபாட்டு மண்டபத்திலேயே, அர்ச்சகர்கள் ஒருவர் பின் ஒருவராக தொடர்ந்து உணவு சாப்பிடுகின்றனர். பக்தர்கள் வழிபாடு செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, சாப்பிட என, ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு அர்ச்சகர்கள் செல்ல, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.