நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு ஆர்.ஓ., சிஸ்டம் வழங்கல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07அக் 2017 12:10
நாமக்கல்: நாமக்கல், ஆஞ்சநேயர் கோவிலுக்கு, 1.25 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆர்.ஓ., சிஸ்டம் பொருத்தப்பட்டது. நாமக்கல்லில், பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவிலுக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர். அவர்கள் பயன்பாட்டிற்காக, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மூலம், தருவிக்கப்பட்ட, 1.25 லட்சம் மதிப்பிலான, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரத்தை, எம்.எல்.ஏ., பாஸ்கர் திறந்து வைத்தார். இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ், தக்கார் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.