தியாகதுருகம்: தியாகதுருகம் மலை மீது சீனுவாச பெருமாளுக்கு திருத்தளிகை வழிபாடு நடந்தது. தியாகதுருகம் நகரின் மையப்பகுதியில் உள்ள மலை மீது புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு திருத்தளிகை வழிபாடு நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி, சீனுவாச பெருமாள் உற்சவர் சிலைகள் மலைமீது மீது எடுத்து செல்லப்பட்டு அங்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்து மகாதீபாராதனை செய்யப்பட்டது. நுாற்றக்கணக்கான பக்தர்கள் மலை மீது ஏறிச்சென்று பெருமாளை வழிபட்டனர். அதேபோல் பெருமாள் கோவிலில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து பூஜைகள் நடத்தப்பட்டது. சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலித்தார்.