Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுப்பொலிவு பெறும் ... பாடலாத்ரி கோவிலில் பாதுகாப்பு அவசியம் பாடலாத்ரி கோவிலில் பாதுகாப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கோவிலில் கிருத்திகை விழா: காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
திருத்தணி கோவிலில் கிருத்திகை விழா:  காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

10 அக்
2017
11:10

திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பக்தர்கள் பொது வழியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக, காத்திருந்து, மூலவரை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, புரட்டாசி மாத கிருத்திகை விழாவையொட்டி, அதிகாலை, 4:45 மணிக்கு, மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, மூலருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 9:30 மணிக்கு, காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு விபூதி, பால், பன்னீர், இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. மாலை, 5:00 மணிக்கு, மூலவருக்கு சாய்ரட்சை பூஜையும், இரவு, 7:30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, சிறப்பு அலங்காரத்தில் மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கிருத்திகை விழாவையொட்டி, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து மூலவரை வழிபட்டனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மொட்டை அடித்தும், மலர் காவடிகள் எடுத்து வழிபட்டனர். பொது வழியில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து மூலவரை வழிபட்டனர். இதே போல், அருங்குளம் கூட்டுச்சாலையில் உள்ள சத்திய சாட்சி கந்தன் கோவில், திருத்தணி கோட்ட ஆறுமுக சுவாமி ஆகிய கோவில்களில் கிருத்திகை விழாவையொட்டி, காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலையில், வண்ண மலர்களால் அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது ... மேலும்
 
temple news
அரியலூர்: முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு திருக்கடையூர், சீர்காழி கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக் குண்டம் திருவிழா கொடியேற்றம் ... மேலும்
 
temple news
 குன்றத்துார்; ஆடி பூரத்தை முன்னிட்டு, மாங்காடு காமாட்சி அம்மனுக்கு நாளை 1008 கலச அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar