Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கைலாசநாதர் கோவில் சிற்பங்களில் ... கருப்பராய சுவாமி கோவிலில் 108 சங்காபிஷேக பூஜை கருப்பராய சுவாமி கோவிலில் 108 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

16 அக்
2017
11:10

சென்னை: அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் தேரோட்டம், வெகுவிமரிசையாக நேற்று நடைபெற்றது. சென்னை, மணலிபுதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி திருக்கோவிலில், ஆனி மற்றும் புரட்டாசி மாதங்களில் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டு புரட்டாசி, 10 நாள் திருவிழா, 6ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், நேற்று நடைபெற்றது. காலை, 6:00 மணிக்கு, பணிவிடை - உகபடிப்பு துவங்கியது. முற்பகல், 11:30 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில் அய்யா வைகுண்ட தர்மபதி எழுந்தருளினார்.

சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், சிவ சிவ ஹர ஹர, அய்யா உண்டு என, பக்தி முழக்கத்துடன், வடம் பிடித்து இழுத்தனர். தேர் புறப்படுவதை குறிக்கும் வகையில், சங்கு முழக்கம், மாணவியர் நடனம், நாதஸ்வர கச்சேரி, செண்டை மேளங்கள் வாசிக்கப்பட்டன. திருத்தேர், மணலிபுதுநகர் பிரதான வீதிகளில் வலம் வந்து, மாலையில் தேர் நிலையை அடைந்தது. தேரோட்டத்தில், மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ., தமிழக தலைவர், தமிழிசை சவுந்தரராஜன், காங்., - எம்.எல்.ஏ., வசந்தகுமார், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு, வீதிதோறும் அன்ன தானம் வழங்கப்பட்டது. மாலையில், இந்திர விமான வாகனத்தில், அய்யா பதிவலம் வந்தார். இரவு, பட்டாபிஷேக திரு ஏடு வாசிப்பு போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. இன்று அதிகாலை, 1:45 மணிக்கு, அய்யா பூம்பல்லாக்கு வாகனத்தில் பதிவலம் வருதல் நிகழ்வும் நடைபெற்றது. பிற்பகல், 2:30 மணிக்கு, திருக்கொடி அமர்தல் நிகழ்வுடன், விழா நிறைவுற்றது. - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று, ஆடி மாதம் முதல் கிருத்திகை விழா என்பதால், அதிகாலை 5:00 ... மேலும்
 
temple news
 திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
 பழநி; பழநி கோயிலில் ஆடி மாத கார்த்திகை, மற்றும் விடுமுறை நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பழநி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு ... மேலும்
 
temple news
திண்டிவனம்; திண்டிவனம் கிடங்கல் பகுதியில் ஆடிகிருத்திகையை முன்னிட்டு, பக்தர்களுக்கு மிளகாய் பொடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar