தேவர்கள், அசுரர்கள் இணைந்து அமிர்தத்திற்காகப் பாற்கடலைக் கடைந்தபோது மகாலக்ஷ்மி அமாவாசையன்று தோன்றி மகாவிஷ்ணுவை மணந்து கொண்டாள். அந்தப் புனிதமான தினத்தை மக்கள் விளக்குகள் ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடுகின்றனர். இந்த நன்நாளில் தீபமேற்றி விஷ்ணு சகஸ்ரநாமம், லக்ஷ்மி அஷ்டோத்திரம் கூறினால் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும்.