Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கந்த சஷ்டி விழா ... மாரியம்மன், முனியப்பசுவாமி பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1,000 ஆண்டுகள் பழமையான அய்யனார் சிலை கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2017
01:10

ஆரணி: ஆரணி அருகே, கே.கே.தோப்பு கிராமத்தில் உள்ள வயல்வெளியில், 1,000 ஆண்டுகள் பழமையான அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டது. திருவண்ணாமலை மரபுசார் அமைப்பு மூலம், ஆரணி பகுதியில், அமைப்பின் தலைவரும், தொல்லியல் ஆர்வலருமான ராஜ் பன்னீர்செல்வம் மற்றும் அப்பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் ஆகியோர் கள ஆய்வில் ஈடுபட்டனர். இதில், ஆரணி அடுத்த முள்ளண்டிரம் கிராம வயல் பகுதியில், பாதி புதையுண்ட நிலையில், ஒரு சிலையை கண்டறிந்தனர். அதை ஆய்வு செய்ததில், அய்யனார் சிலை என்பது தெரிந்தது. நான்கு அடி உயரமும், மூன்று அடி அகலமும் கொண்ட கல்லில், சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த அய்யனாரின் தலையில், அடர்ந்த ஜடாபாரத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், இரு காதுகளிலும் வட்டமான பத்ரகுண்டலம் அணிந்து, எடுப்பான மூக்கு, தடித்த உதடுகளை உடைய வாய், அகன்ற தோள் ஆகிய அம்சங்களுடன் ஜடாபாரத்தின் இடதுபுறம் பிறை நிலாவுடன் உள்ளது. கையில் உள்ள ஆயுதமான செண்டையை வலது கரத்தில் உயர்த்தி பிடித்தும், இடக்கையை நீட்டியும், அவரது வாகனமான யானையின் மீது உட்குதிகாசன் முறையில் அமர்ந்திருப்பதுபோல செதுக்கப்பட்டுள்ளது. இவை, ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதி கால பகுதி அல்லது பத்தாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தை சேர்ந்தவை என தெரியவந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற ... மேலும்
 
temple news
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி;  தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத மையத்தில் காலை முதல் இரவு வரை வடைகள் வழங்கப்படும் என ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar