நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு பிரத்தியங்கராதேவிக்கு அமாவாசையை முன்னிட்டு நிகும்பலாயாகம் நடந்தது. கடலுார் அடுத்த நடுவீரப்பட்டு நரியன் ஓடை கரையில் அமைந்துள்ள பாதாளகாளி கோவிலில் உள்ள பிரத்தியங்கராதேவிக்கு ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு நிகும்பலாயாகம் நடந்தது. பூஜை மதியம் 12:00 மணிக்கு கலச வேல்வி பூஜைகள் நடந்து 12:15 மணிக்கு யாகவேள்விகள் ஆரம்பிக்கப்பட்டு வேத மந்திரங்கள் ஓதப்பட்டு 1:00 மணிக்கு யாகத்தில் மிளகாய்வற்றல்கள் கொட்டப்பட்டு நிகும்பலாயாகம் நடந்தது.1:30 மணிக்கு மகா பூர்ணாஹீதியும் அதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.1:45 மணிக்கு பாதாளகாளிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரத்தியங்கராதேவியை வழிபட்டனர்.