ராமர் தீர்த்தம் தூர்வாரும் பணி கோயில் நிர்வாகம் முன்வருமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23அக் 2017 12:10
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கோயில் சொந்தமான ராமர் தீர்த்த குளத்தை முழுமையாக துார்வார கோயில் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் விரும்புகின்றனர்.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வெளி பகுதியில் 108 தீர்த்த குளம், கிணறுகள் உள்ளது. இந்த தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடிய பிறகேகோயிலுக்குள் 22 தீர்த்தங்களையும் பக்தர்கள் நீராடினர். இதில் ராமேஸ்வரத்தில் உள்ள ராமர் தீர்த்தத்தில் நீராடினால் பாவங்கள் நீங்கி, சவுபாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த தீர்த்தத்தில் ராமர் நீராடியதாக வரலாறு உண்டு. தற்போது ராமர் தீர்த்த குளம் நீரின்றி சகதி, கல்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் குவிந்து கிடந்ததால், பக்தர்கள் முகம் சுளித்து சென்றனர். இதனையடுத்து பசுமை ராமேஸ்வரம், பாரத் சேவா அமைப்பு நிர்வாகிகள் சரஸ்வதி, முனியசாமி உள்ளிட்ட சேவா குழுவினர், ராமர் தீர்த்த குளத்தை துார் வாரினர். இப்பணியை பா.ஜ.க.,ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முரளீதரன் துவக்கினார். இரு ஏக்கர் பரப்புள்ள தீர்த்த குளத்தில் குவிந்து கிடக்கும் சகதி, கல்களை சேவா குழுவினரால் முழுமையாக அகற்ற முடியவில்லை. எனவே மழை காலம் துவங்குவதற்கு முன் மண் அள்ளும் இயந்திரம் முலம் குளத்தை துார் வார கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.