Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோமாரி மந்திரக்கல் கண்டுபிடிப்பு குழந்தை வரம் அருளும் நெகமம் மாயாண்டீஸ்வரர் குழந்தை வரம் அருளும் நெகமம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி ரோப்கார் பராமரிப்பில் சென்சார் கருவிகள்
எழுத்தின் அளவு:
பழநி ரோப்கார் பராமரிப்பில் சென்சார் கருவிகள்

பதிவு செய்த நாள்

24 அக்
2017
11:10

பழநி : பழநி முருகன் கோயில் ரோப்கார் பராமரிப்பு பணியில், கோல்கட்டாவில் இருந்து வந்த புதிய ஷாப்ட் மற்றும் விபத்தை தவிர்க்க அதிர்வலைகள் கண்டறியும் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. பழநி மலைக் கோயிலுக்கு மூன்று நிமிடங்களில் செல்ல ரோப்கார் காலை 7:00 - இரவு 8:30 மணி வரை இயங்குகிறது. இதன் பராமரிப்பு பணிகள் செப்.,12 முதல் நடக்கிறது.ரோப்கார் மேல்தளம், கீழ்தளத்தில் கம்பிவடம், பல்சக்கரங்கள், ஷாப்ட்கள், உருளைகள், எட்டு பெட்டிகள் உட்பட அனைத்தையும் முழுமையாக பரிசோதனை செய்கின்றனர். கம்பிவடம்நன்றாக உள்ளதால் அதனை மாற்றவில்லை. கோல்கட்டாவில் இருந்து ஷாப்ட் வந்துள்ளது. அதை மேல்தளத்தில் பொருத்தியுள்ளனர்.அதிர்வலை கண்டறிய கருவி பலத்த காற்று, மழை குறித்து அறிய ஏற்கனவே வானிலை அறிக்கை கருவி, காற்றின் வேகம் கண்டறியும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன் தற்போதைய பராமரிப்பு பணியில் சென்னை தனியார் நிறுவனத்தினர் மூலம் அதிர்வலைகளை கண்டறியும் சென்சார் கருவிகள் கீழ்தளத்தில் ஆறும், மேல்தளத்திலும் இரண்டும் பொருத்தப்படுகின்றன. இவற்றின் மூலம் ரோப்கார் இயக்கத்தின் போது, இயந்திரம், கம்பிவடம் உள்ளிட்டவற்றில் வழக்கத்தை விட கூடுதலாக மிகநுண்ணிய அதிர்வு ஏற்பட்டாலும், பீப் ஒலி மூலம் ஆபரேட்டர் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் ஷாப்ட் பழுது, பல்சக்கரம், கம்பி வடம், உருளை தேய்மானம் உள்ளிட்ட பழுதுகளை கண்டுபிடிக்கவும், விபத்தை தவிர்க்கவும் வழி ஏற்பட்டுள்ளது. இணை ஆணையர் செல்வராஜ் கூறுகையில்,கந்தசஷ்டி விழா (அக்.,26ல்) முடிந்தபின், சோதனை ஓட்டம் நடத்தப்படும். பின், ரோப்கார் இயக்கப்படும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை கிரௌஞ்சமலை கனக்சௌரி கார்த்திக் சுவாமி கோயிலில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; வைகாசி உற்சவ விழா யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் தீர்த்த குளத்தை சுற்றி வலம் ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவ பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா, 13 ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் நேற்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar