திருவள்ளூர் : பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், மூல மந்த்ர ஹோமம் நடந்தது. திருவள்ளூர், பெரியகுப்பம், தேவி மீனாட்சி நகரில், 32 அடி உயர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஒவ்வொரு மாதமும், மூல நட்சத்திரத்தன்று, மூல மந்த்ர ஹோமம் சிறப்பாக நடத்தப்படுகிறது. பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், மூல நட்சத்திரத்தை முன்னிட்டு, ஹோமம் காலை, 9:00 மணிக்கு துவங்கி, காலை, 11:00 மணிக்கு, நிறைவடைந்தது. ஹோமம் முடிவில், மகா தீபாராதனை நடந்தது.