Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ... வடமாநிலங்களில் பிரபலமான சாத் பூஜை: மெரீனாவில் கோலாகலம் வடமாநிலங்களில் பிரபலமான சாத் பூஜை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கோவிலில் திருக்கல்யாணம்: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
திருத்தணி கோவிலில் திருக்கல்யாணம்: பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

27 அக்
2017
10:10

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கந்த சஷ்டி நிறைவு விழாவையொட்டி, நேற்று, கல்யாண உற்சவர் பெருமானுக்கு திருக்கல்யாணம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருத்தணி முருகன் கோவிலில், கந்த சஷ்டி மற்றும் லட்சார்ச்சனை விழா, 20ம் தேதி துவங்கியது. விழாவை ஒட்டி, தினமும், காலை, 10:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை காவடி மண்டபத்தில், உற்சவர் சண்முகப் பெருமானுக்கு லட்சார்ச்சனை மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது.

நேற்று முன்தினம், மாலை, உற்சவர் சண்முக பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நடந்தது. நேற்று, காலை, 11:00 மணிக்கு காவடி மண்டபத்தில், கல்யாண உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, கல்யாண சீர்வரிசையை, அரக்கோணம் எம்.பி., அரி, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி, முன்னாள் நகர்மன்ற தலைவர், சவுந்தர்ராஜன், ஆகியோர் காவடி மண்டபத்திற்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின், கல்யாண உற்சவருக்கும், வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாணம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, முருகப் பெருமானை தரிசித்தனர்.

மணவாள நகர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் அமைந்துள்ளது மங்கள ஈஸ்வரி உடனுறை மங்கள ஈஸ்வரர் கோவில். இந்த கோவில் வளாகத்தில், வள்ளி, தெய்வானை சமேத மங்கள சுப்ரமணி சுவாமி சன்னதி உள்ளது. இங்கு, 22ம் ஆண்டு, கந்த சஷ்டி லட்சார்ச்சனை விழா, 20ம் தேதி துவங்கியது. தினமும், காலை, 8:00 மணிக்கும், மாலை, 7:00 மணிக்கும் லட்சார்ச்சனை விழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம், நேற்று நடந்தது. காலை, 10:30 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் வள்ளி, தெய்வானை சமேத மங்கள சுப்ரமணியருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி தொடங்கியது. பின், தொடர்ந்து காப்பு கட்டி, புத்தாடை அணிவித்து மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து பகல், 1:00 மணிக்கு, வள்ளி, தெய்வானை சமேத மங்கள சுப்ரமணியருக்கு திருக்கல்யாணம் நடந்தது. அதன் பின், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், மணவாள நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த,திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 
temple news
அசுரனுடன் போரிட்டு அவனை ஆட்கொண்டார். அவனை இருகூறாகப் பிளந்தவர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுடன் ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையிலும் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar