பொள்ளாச்சி: பொள்ளாச்சி சிவ ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில், மண்டல பூஜை நிறைவு நாள் விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. பொள்ளாச்சி அன்சாரி வீதியில் புதியதாக கட்டப்பட்ட சிவராமபக்த ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிேஷகவிழா கடந்த மாதம் நடந்தது. இதனையடுத்து,மண்டல பூஜைகள் நடந்தது. மண்டல பூஜை நிறைவு நாள் விழாவையொட்டி, காலை, 7:30 மணிக்கு அபிேஷக பூஜை மற்றும் ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். காலை , 11:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.