Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை தீப விழாவிற்கு சிறப்பு ... ஆற்றங்கரையில் அருளும் அம்மன் ஆற்றங்கரையில் அருளும் அம்மன்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விழுதில்லா ஆலமர நிழலில் வீற்றிருக்கும் பட்டாபிராமன்
எழுத்தின் அளவு:
விழுதில்லா ஆலமர நிழலில் வீற்றிருக்கும் பட்டாபிராமன்

பதிவு செய்த நாள்

31 அக்
2017
12:10

பொள்ளாச்சி: ராமாயணத்தில் சகோதரத்துவம், அன்பு, நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் ராமன். அவருக்கு துணையாக சீதாவும், தம்பி லட்சுமணனும் வனவாசம் புகுந்தனர். இதிகாசத்தில் கடவுள் அவதாரமான அவர்களை, மனதில் குடிகொண்டு அருள்பாலிக்கின்றனர். பொள்ளாச்சி, நெகமம் அடுத்துள்ள, சின்னேரிபாளையம் - சின்னநெகமம் இடையே, நுாற்றாண்டு கண்ட விழுதில்லா ஆலமரத்தடியில் பட்டாபிராமன் கோவில் உள்ளது. உடனிருந்து லட்சுமணனும், சீதாதேவியும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

பட்டாபிராமனின் அருள் பெற்றவர்கள், அங்கு கோவில் கட்டி, வாரந்தோறும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குகின்றனர். கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் பட்டாபிராமனுக்கு, ஆலமரம் நிழல் கொடுத்து வருகிறது. இந்த ஆலமரத்துக்கு விழுதுகளே இல்லை என்பது தான் ஆச்சரியம். இதுவே, கோவிலின் தல விருட்சமாக உள்ளது. அருகிலே வேப்பமரமும் வளர்ந்துள்ளது. பட்டாபிராமனை வழிபட வரும் பக்தர்களை மட்டுமல்ல, வாகனங்களையும் தன் இடப்புறமாக வலம் வர வைக்கிறது இந்த ஆலமரம். ஒவ்வொரு சனிக்கிழமையன்றும், பட்டாபிராமனுக்கு அபிேஷகம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. புரட்டாசி மாதம் ராமனுக்கு உகந்த நாள் என்பதால், பக்தர்களின் மனமுவந்து, சிறப்பு பூஜை செய்கின்றனர். தீர்வு காண முடியாத பிரச்னைகள், குடும்ப சிக்கல், நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கவும் பட்டாபிராமனையும் வழிபடுகின்றனர். நிலம் வாங்குதல், விற்பனை செய்தல், சொத்து பிரச்னைகளுக்கு ராமனை வணங்கினால் தீர்வு கிடைப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். ஒரே கற்சிலையில், ராமன், லட்சுமணன், சீதாதேவி ஆகியோர் வடிவமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar