Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று கார்த்திகை கடைசி சோமவாரம்! பக்தர்களை துன்புறுத்திய கேரளா: ஸ்ரீ ஐயப்ப சேவா சமாஜம் கண்டனம்! பக்தர்களை துன்புறுத்திய கேரளா: ஸ்ரீ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்குடி தென் சபரியில் விரதம் முடிக்கும் பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 டிச
2011
11:12

காரைக்குடி : முல்லைப் பெரியாறு அணை பிரச்னையால் அய்யப்ப பக்தர்கள், காரைக்குடி, தென் சபரி அய்யப்பன் கோவிலில் விரதம் முடிக்கின்றனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ளது கொசப்பட்டி. இங்கு, 18 படியுடன் கூடிய, தென் சபரி அய்யப்பன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், இங்கிருந்து புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டி, சபரிமலை செல்வது வழக்கம். இந்த ஆண்டு, முல்லைப் பெரியாறு அணை பிரச்னையால், கேரள எல்லைக்குள் தமிழர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல முடியவில்லை. தற்போது, கொசப்பட்டி தென் சபரி அய்யப்பன் கோவிலுக்கு, புதுக்கோட்டை, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருமயம், காரைக்குடி, பேராவூரணியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வாகனங்களிலும், பாதயாத்திரையாகவும் தினமும் வருகின்றனர். அவர்கள் இருமுடியுடன், 18 படி ஏறி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, விரதத்தை முடிக்கின்றனர்.

காரைக்குடியைச் சேர்ந்த பக்தர் ராமன் கூறியதாவது: கடந்த 12 ஆண்டுகளாக, சபரிமலைக்குச் செல்கிறேன். முல்லைப் பெரியாறு அணை பிரச்னையால், தமிழக அய்யப்ப பக்தர்கள் தாக்கப்படுகின்றனர். இதனால், சபரிமலை செல்வதைத் தவிர்த்து, பாத யாத்திரையாக, கொசப்பட்டியில் விரதத்தை முடித்தோம்.

புதுக்கோட்டை முத்துக்குமார் கூறுகையில், அய்யப்பனுக்கு மூன்றாண்டு மாலை அணிந்து செல்கிறேன். கேரளாவில், தமிழர்கள் தாக்கப்படுவதால், பாதுகாப்பு கருதி, இம்முறை சபரிமலை செல்லாமல், கொசப்பட்டி தென் சபரி அய்யப்பன் கோவிலில் விரதம் முடித்தோம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar