பதிவு செய்த நாள்
09
நவ
2017
01:11
ஈரோடு: கவுந்தப்பாடி புதூர் மாரியம்மன், விக்னேஷ்வரர் கோவிலில் திருப்பொன்னூஞ்சல் உற்சவ விழா, வரும், 11 மற்றும், 12 ஆகிய நாட்களில் நடக்க உள்ளது. வரும், 11 காலை, 7:00 மணிக்கு கணபதி ?ஹாமம், மாலை, 5:00 மணிக்கு பல்வேறு பூஜைகள், இரவு, 9:00 மணிக்கு, 64 பைரவ பலி, 64 யோகினி பலி, 12 காலை, 7:30 மணிக்கு சிறப்பு பூஜை, மதியம், 12:00 மணிக்கு அம்பாளுக்கு அபி ?ஷகம், மாலை, 6:00 மணிக்கு பொன்னூஞ்சல் உற்சவம் நடக்கிறது. அன்று மதியம், 2:00 மணி முதல் மாரியம்மன் திருமண மண்டபத்தில் அன்னதானம் நடக்கிறது.