Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாழடைந்து வரும் வல்வில் ஓரி கட்டிய ... சாய்பாபா பாதுகை பக்தர்கள் தரிசனம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பசுபதீஸ்வரர் கோவிலில் சிலைகள் மாயம்: 2 பேர் கைது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2017
12:11

தஞ்சாவூர்: பந்தநல்லூர், பசுபதீஸ்வரர் கோவிலில் இருந்து, ஆறு சிலைகள் மாயமானது தொடர்பாக, இருவரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, 1,000 ஆண்டுகள் பழமையான, பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலில், பந்தநல்லூரை சுற்றியுள்ள, 73 கிராமங்களில் உள்ள கோவில்களில் இருந்த பழமையான ஐம்பொன் சிலைகள், வெண்கல சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. கோவில் திருவிழாக்களின் போது, அந்த சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு, மீண்டும் கொண்டு வந்து வைக்கப்படும். கடந்த, 2013ல் கணக்கெடுப்பு நடத்திய போது, பாதுகாப்பாக இருந்த சிலைகளில், கீழமணக்குடி விஸ்வநாத சுவாமி கோவிலுக்குரிய விநாயகர், புஷ்பகரணி, வள்ளி தெய்வானை, சந்திரசேகர அம்மன் உட்பட, ஆறு சிலைகள் மாயமாகியிருப்பது தெரியவந்தது. இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின்படி, பந்தநல்லூர் போலீசாரும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பசுபதீஸ்வரர் கோவிலில், ஏற்கனவே செயல் அலுவலராக இருந்த ராமச்சந்திரன், 63, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கோவில் தலைமை எழுத்தர், ராஜா, 37, ஆகியோரை கைது செய்தனர். இருவரையும், கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை, 23ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி, நீதிபதி உத்தரவிட்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவில் இறைவனுக்கு அம்மையார் அமுதுபடைக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகம் முடிவடைந்த நிலையில், வீடு, வீடாக சென்று பிரசாதம் ... மேலும்
 
temple news
சாத்துார்; சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. வெங்கடாஜலபதி கோயில் ... மேலும்
 
temple news
சிவகங்கை; திருப்புத்துார் அருகே துவார் கிராமத்தில் 15ம் நுாற்றாண்டு கல்வெட்டை வரலாற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar