Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாழடைந்து வரும் வல்வில் ஓரி கட்டிய ... சாய்பாபா பாதுகை பக்தர்கள் தரிசனம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பசுபதீஸ்வரர் கோவிலில் சிலைகள் மாயம்: 2 பேர் கைது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2017
12:11

தஞ்சாவூர்: பந்தநல்லூர், பசுபதீஸ்வரர் கோவிலில் இருந்து, ஆறு சிலைகள் மாயமானது தொடர்பாக, இருவரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, 1,000 ஆண்டுகள் பழமையான, பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலில், பந்தநல்லூரை சுற்றியுள்ள, 73 கிராமங்களில் உள்ள கோவில்களில் இருந்த பழமையான ஐம்பொன் சிலைகள், வெண்கல சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. கோவில் திருவிழாக்களின் போது, அந்த சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு, மீண்டும் கொண்டு வந்து வைக்கப்படும். கடந்த, 2013ல் கணக்கெடுப்பு நடத்திய போது, பாதுகாப்பாக இருந்த சிலைகளில், கீழமணக்குடி விஸ்வநாத சுவாமி கோவிலுக்குரிய விநாயகர், புஷ்பகரணி, வள்ளி தெய்வானை, சந்திரசேகர அம்மன் உட்பட, ஆறு சிலைகள் மாயமாகியிருப்பது தெரியவந்தது. இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின்படி, பந்தநல்லூர் போலீசாரும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பசுபதீஸ்வரர் கோவிலில், ஏற்கனவே செயல் அலுவலராக இருந்த ராமச்சந்திரன், 63, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கோவில் தலைமை எழுத்தர், ராஜா, 37, ஆகியோரை கைது செய்தனர். இருவரையும், கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை, 23ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி, நீதிபதி உத்தரவிட்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புனித நீராடி வழிபட அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம்  கிடைக்கும்.மாசி மாதம் முழுவதுமே ... மேலும்
 
temple news
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும், ஒரே நேர்கோட்டில் வரும் போது, பூமியின் நிழல் சந்திரன் மீது ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மாசி மகம் பௌர்ணமி திதியும் மகம் நட்சத்திரமும் இணையும் ஒரு புண்ணிய நாளாகும். மாசி ... மேலும்
 
temple news
ஈரான் இஸ்ரேல் போரில் பொது மக்கள் பாதிக்காமல் இருக்க கோளறு பதிகம் மற்றும் நெடுங்காலம் பதிகம் ஆகிவற்றை ... மேலும்
 
temple news
சேத்தியாத்தோப்பு: திருக்கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவிலில் மாசிமக தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar