Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மனமுருகும் ஜோதி வடிவ வழிபாடு கிருஷ்ணகிரி சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை கிருஷ்ணகிரி சிவன் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலுார் தெப்பக்குளம், தீர்த்த குளம் வறண்டுபோன அவலம்!
எழுத்தின் அளவு:
திருக்கோவிலுார் தெப்பக்குளம், தீர்த்த குளம் வறண்டுபோன அவலம்!

பதிவு செய்த நாள்

14 நவ
2017
12:11

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ஏரியில் தண்ணீர் நிரம்பி வழிந்தாலும், தீர்த்த குளம், தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பாததால், நகரில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்தில் உள்ளது. திருக்கோவிலுார், பழங்காலத்தில்  திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம். தென்பெண்ணை நதிக்கரையில் அமைந்ததால், நாகரீகத்திலும் உயர்ந்து, மலையமாநாட்டின் தலைநகரம் என்ற அந்தஸ்துடன் ஒருகாலத்தில் சிறந்து விளங்கியது. இன்று நாகரீகம் வளர்ந்தும், நகரின் அடிப்படை வசதிகள் உயரவில்லை. நகரின் முக்கிய பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு, சாலைகள் குறுகி, நீர்வழிதடங்கள் மறிக்கப்பட்டு, தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை மூலம் தென்பெண்ணையில் பெருக்கெடுத்த தண்ணீரால், திருக்கோவிலுார் பெரிய ஏரி நிரம்பி, கடல்போல் காட்சியளிக்கிறது. இங்கிருந்து தீர்த்த குளம், தெப்பக்குளங்களுக்கு செல்லும் நீர்வழிப்பாதை அடைக்கப்பட்டுள்ளதால், இரண்டு குளங்களும் வறண்டு கிடக்கின்றன.  தற்போதும் ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டுள்ளது. இதனால் ஏரி நிறைய தண்ணீர் உள்ளது. ஆனால் குளத்தில்தான் தண்ணீர் நிரம்பவில்லை. இதனால் நகரில் உள்ள கிணறுகளில், எட்டி எடுக் கும் அளவிற்கு தண்ணீர் இருந்த நிலை மாறி, இன்று வறண்டு கிடக்கின்றன. நகர் முழுவதும் ஆழ்துளை கிணறுகள் ஆக்கிரமித்து, நிலத்தடி நீர்மாட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. ஏரியில் இருந்து குளத்திற்கு வரும் பாதாள கால்வாயில் உள்ள அடைப்பை சீர்செய்ய பேரூராட்சி நிர்வாகம் அக்கறை செலுத்தவில்லை. அதே நேரத்தில் தெப்பக்குளத்தை துார்வாருவதாக கூறி, பல லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அதில் கிடைக்கும் லாபத்தொகை, இதில் கிடைக்காது என்பதால், குளத்து கால்வாயை சீரமைக்க யாரும் அக்கறை செலுத்தவில்லை என பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar