திருவண்ணாமலை தீப திருவிழா: டிச.,2ல் உள்ளூர் விடுமுறை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29நவ 2017 12:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, கலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு டிச.2ல், திருவண்ணாமலை மாவட்டத்தில், மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு சார்புடைய நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.