Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி ... கார்த்திகை தீப திருவிழா: சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தலைவாசலில் பாழடைந்த பழமையான சிவாலயம் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2017
12:11

தலைவாசல்: தலைவாசல் அருகே, பழமைவாய்ந்த சிவாலயம், சிதிலமடைந்து இடியும் நிலையில் உள்ளது.

தலைவாசலில், பழமையான சிவாலயங்கள் ஏராளமாக உள்ளன. மணிவிழுந்தான் தெற்கு ஊராட்சியில், 2000 ஆண்டு களுக்கு மேல், பழமை வாய்ந்த மணிகண்டேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலை, மன்னர் வானகோவராயன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. குடைவரை கோவில் வடிவத்தை கொண்ட இது, பாண்டியர் கால கட்டட கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. கோவிலின் மூலவரான மணிகண்டேஸ்வரர், இரண்டு அடி உயரத்தில், லிங்க வடிவில் அருள் பாலிக்கிறார். கோவில் உள்ளே நுழைந்ததும், இரண்டு அடி உயரத்தில், ஒரே கல்லால் ஆன நந்தி சிலை உள்ளது. இதன் கழுத்தில் மணி, சலங்கை போன்றவை, கற்களிலேயே செதுக்கப்பட்டுள்ளது. கோவில் உட்புறத்தின் மேல்பகுதி கூம்பு வடிவத்திலும், சுற்றுப்புறச் சுவர்கள் நட்சத்திர வடிவிலும் உள்ளது. பிரதோஷம், பவுர்ணமி ஆகிய நாட்களில், சிவனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இத்தலத்தில் தொடர் வழிபாடு செய்து வர, திருமணத் தடை, குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு, தொழில் மேன்மை உள்ளிட்ட பிரச்னைகள் நிவர்த்தியாகும் என ஐதீகம். சிறப்பு வாய்ந்த இக்கோவில், சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்டது. போதிய பராமரிப்பு இல்லாததால், சிலைகள், சித்திர வேலைப்பாடுகள் அரிக்கப்பட்டு, எலும்புக்கூடு போல் காட்சியளிக்கிறது. மூலவரின் உடனுறையான மணிகண்டேஸ்வரி அம்மன் ஆலயம், இடியும் நிலையில் இருந்ததால், பாதுகாப்பு கருதி அருகில் உள்ள மணியம்மை கோவிலில், அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிதிலமடைந்த நிலையில் உள்ள கோவிலை புதுப்பிக்க, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
போத்தனூர்: மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. தைப்பூசம் துவக்கம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் தை மாத கார்த்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar