1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் இலட்சுமி அம்மாளுக்கும்
எட்டயபுரத்தில், பிறந்த பாரதி (சுப்பையா என்று அழைக்கப்பட்டார்) தனது
11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை
வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு
தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம்
மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில்
கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது
காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை
அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னரால் அழைத்து
வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு வருடங்கள்
பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல்
விவேகபானு இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில்
பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில்
தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 1921ல் செப்டம்பர் 11 நள்ளிரவு
பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தார். காலங்களிலேயே அப்பணியை
விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார்.
பின்னர் எட்டையபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில்
பாரதி வாழ்ந்தார். ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம்
ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் விவேகபானு இதழில் வெளியானது. வாழ்நாள்
முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி
மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 1921ல்
செப்டம்பர் 12 நள்ளிரவு தாண்டி, காலை 1.30 மணி சுமாருக்கு பாரதி, தேச
விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தார்.