பதிவு செய்த நாள்
12
டிச
2017
11:12
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், நேற்று நடந்த லட்சதீபதிருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீபமேற்றி வழிபட்டனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், ஆண்டுதோறும், கார்த்திகை மாதம், நான்காவது சோமவாரம், லட்சதீப திருவிழா நடத்தப்படுகிறது. அந்த வகையில், நேற்று மாலை , லட்சதீப திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீபமேற்றி வழிபட்டனர். சுவாமிக்கு
மஹா அபிஷேகமும், 108சங்காபிஷேகமும், துாப தீப ஆராதனையும் நடந்தது.
வாகன நெரிசல்: ஏகாம்பரநாதர் கோவிலை சுற்றியுள்ள தெருக்களில், பாரம்பரிய நகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கால்வாய் அமைக்கும் பணி நிறைவு பெறாததாலும், பிற பணிகள் நிறைவடைந்தும் பள்ளங்கள் மூடப்படாததாலும், கோவிலுக்கு வந்த வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்றனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.