ராஜபாளையம் : ராஜபாளையம் ஸ்ரீ வேட்டை வெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில் 20ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா நடைபெற்றது. நான்கு நாட்களாக நடைபெற்ற இவ்விழாவில் விஸ்வரூப தரிசனம், நவகலச திருமஞ்சனத்தை தொடர்ந்து திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் ஆசி பெற்றனர். மகாலட்சுமி, சுதர்சன, லட்சுமி, தன்வந்திரி ேஹாமத்தை தொடர்ந்து விசேஷ அலங்காரத்தில் ஸ்ரீ வேட்டை வெங்கடேஷ பெருமாள், ஸ்ரீ பத்மாவதி தாயார் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் திருமலை அய்யங்கார், முரளி வெங்கட்ராமன் செய்திருந்தனர்.