சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூரில் ஐயப்ப சுவாமிக்கு படிபூஜை நடந்தது. காட்டுவனஞ்சூர் முருகன் கோவில் வளாகத்தில் உள்ள ஐயப்ப சுவாமிக்கு படிபூஜை நடந்தது. குருசுவாமிகள் கிருஷ்ணமூர்த்தி, பாலு, ராதாமணி, பழனி, சகிமணி, மோகன், கிருஷ்ணன், சரவணன் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து ஐயப்ப பக்தர்களுக்கு பாதபூஜை நடந்தது. பின்னர் படி பூஜை மற்றும் பஜனை நடந்தது. திரளான பக்தர் கள் கலந்து கொண்டனர்.