Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் ... தேவி படவேட்டம்மன் கோவிலில் சங்காபிஷேகம் தேவி படவேட்டம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிலையுடன் கரை ஒதுங்கிய தெப்பம்: சிதம்பரம் அருகே பரபரப்பு
எழுத்தின் அளவு:
சிலையுடன் கரை ஒதுங்கிய தெப்பம்: சிதம்பரம் அருகே பரபரப்பு

பதிவு செய்த நாள்

14 டிச
2017
12:12

கிள்ளை: சிதம்பரம் அருகே, கடலில் கரை ஒதுங்கிய, சிலையுடன் கூடிய தெப்பத்தால் பரபரப்பு நிலவுகிறது. கடலுார் மாவட்டம், கிள்ளை அருகே உள்ள எம்.ஜி.ஆர்., திட்டை சேர்ந்த மீனவர்கள், நேற்று மாலை 3.00 மணியளவில், கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, 15 அடி உயர கம்பத்தில், பல வண்ண கொடி பறப்பதை பார்த்து திடுக்கிட்ட மீனவர்கள், ஒக்கி புயலில் காணாமல் போனவர்கள் திசைமாறி வந்து விட்டார்களோ என்ற ஆச்சரியத்துடன், விரைந்து சென்று பார்த்தனர்.

அங்கு, 10 அடி அகலம், 10 அடி நீளத்தில் மூங்கிலால் செய்யப்பட்ட தெப்பம் மிதந்து கொண்டிருந்தது. தெப்பத்தில் 41 வர்ணம் தீட்டப்பட்ட கலசங்கள், இரு பூஜை தட்டுகள்  மற்றும் பூஜை பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. நீலம், மஞ்சள், சிகப்பு நிற கொடிகளும் தெப்பத்தில் பறந்தன. தெப்பத்தின் உள்ளே, ஒன்றரை அடி உயரத்தில், வெண்கலத்தால் ஆன, புத்தர் போன்ற தோற்றத்தில் அமர்ந்த நிலையில், ஒரு கையில் கலசமும், மறுகையால் மூடிய நிலையிலான சிலை இருந்ததைக் கண்டு திடுக்கிட்டனர்.  சிலையுடன் கூடிய தெப்பத்தை, தங்கள் படகில் கட்டி, கரைக்கு இழுத்து வந்து, உப்பனாற்றில் நிறுத்தி வைத்துள்ளனர். இதனை, சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள் வியப்புடன் பார்த்துவிட்டு செல்வதால் பரபரப்பு நிலவுகிறது. தகவலறிந்த சிதம்பரம் தாசில்தார் மகேஷ், வருவாய் ஆய்வாளர் சங்கரன், கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கரன் உள்ளிட்டடோர் நேரில் சென்று, தெப்பம் மற்றும் சிலைகளை பார்வையிட்டு, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar