பதிவு செய்த நாள்
14
டிச
2017
01:12
வில்லியனுார்: திருக்காமீஸ்வரர் கோவிலில், அய்யப்ப சுவாமி விளக்கு பூஜை நாளை மறுநாள் நடக்கிறது. வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் உள்ள அய்யப்ப சுவாமிக்கு 42ம் ஆண்டு விளக்கு பூஜை மற்றும் 1,008 சங்கு அபிஷேகம், வரும் 16ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, அன்று காலை சிறப்பு அபிஷேகம், பகல் 12:00 மணிக்கு 1,008 சங்கு அபிஷேகம் நடக்கிறது. அதை தொடர்ந்து, அன்னதான நிகழ்ச்சியை காங்., மாநில செயலாளர் கண்ணபிரான், ஜனார்த்தனன் முன்னிலையில், சபாநாயகர் வைத்திலிங்கம் துவக்கி வைக்கிறார். இரவு 7:00 மணிக்கு அய்யப்ப சுவாமி அம்பல தீபாராதனை, 7:30 மணிக்கு சுவாமி மாட வீதியுலா, பக்தி பாமாலை இசை நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சியில், முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்கின்றனர். கோவில் சிறப்பு அலுவலர் திருவரசன் நன்றி கூறுகிறார். ஏற்பாடுகளை குருசாமி ஏகாம்பரம் தலைமையில் ஐயப்ப பக்தர்கள் செய்து வருகின்றனர்.