Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளாரில் சனிப்பெயர்ச்சி விழா ... சென்னை கோவில்களில் அனுமன் ஜெயந்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் மார்கழி உற்ஸவம் நாளை துவக்கம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் மார்கழி உற்ஸவம் நாளை துவக்கம்

பதிவு செய்த நாள்

18 டிச
2017
05:12

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் மார்கழி உற்ஸவங்கள் நாளை முதல் துவங்குகிறது.ஆண்டுதோறும் மார்கழியில் ஆண்டாள் கோயிலில் பகல்பத்து, ராப்பத்து, எண்ணெய்காப்பு உற்சவங்கள் மற்றும் வைகுண்ட ஏகாதசி வைபவங்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு டிச.19 முதல் 2018 ஜனவரி 14 வரை மார்கழி உற்ஸவங்கள் நடக்க உள்ளன.

பகல்பத்து உற்ஸவம் : இவ்விழாவின் முதல்நாளான நாளை மாலை 5:00 மணிக்கு வேதபிரான் திருமாளிகைக்கு ஆண்டாள், ரெங்கமன்னர் எழுந்தருளி பச்சைபரத்தலை காண்கின்றனர்.இதனையடுத்து பகல்பத்து உற்ஸவம் துவங்குகிறது. இதில் தினமும் காலை 10:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் பகல்பத்து மண்டபத்தில் எழுந்தருளுகிறார். இங்கு அரையர்சேவை, திருவாராதனம், பெரியபெருமாள் பக்தி உலவுதல் முடிந்து இரவு ஆண்டாள், ரெங்கமன்னார் மூலஸ்தானம் வந்தடைவர்.

ராப்பத்து உற்ஸவம் : டிச.29 முதல் ஜனவரி 8 வரை ராப்பத்து உற்ஸவம் வடபத்ரசயனர் சன்னதியில் நடக்கிறது. 8ம் திருநாள் ஆண்டாள் சன்னதியிலும் நடக்கிறது. பத்து, மற்றும் 11ம் திருநாள் எண்ணெய்காப்பு உற்ஸவம் நிறைவு பெற்ற பிறகுஆண்டாள் சன்னதியில் ராப்பத்து உற்சவம் நடக்கிறது.

பரமபதவாசல் திறப்பு : டிச.29 வெள்ளிக்கிழமை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 4:30 மணிக்கு பெரியபெருமாள், ஆண்டாள், ரெங்கமன்னார் வேதவிண்ணப்பமாதல் நடக்கிறது. தொடர்ந்து காலை 7:05 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக எழுந்தருள்கின்றனர்.

எண்ணெய் காப்பு உற்ஸவம் :
2018 ஜனவரி 7 முதல் 14 வரை ஆண்டாள் எண்ணெய் காப்பு உற்ஸவம் நடக்கிறது. இதனை முன்னிட்டு ஆண்டாள் தினமும் சன்னதியிலிருந்து புறப்பட்டு, மாடவீதிகள் வழியாக எண்ணெய்காப்பு மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு மதியம் 3:00 மணிக்கு எண்ணெய்காப்பு உற்ஸவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பூபதித்திருநாள் ( தை தேர்) இன்று ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: தை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே எருமாடு ஸ்ரீ துர்கா பகவதி ஆலய திருவிழாவில் தெய்யம் துள்ளல் , பக்தர்களைக் ... மேலும்
 
temple news
பழநி; பழநி தைப்பூசத்திற்கு முருகன் மலைக்கோயில் செல்ல பக்தர்களின் வசதிக்கேற்ப பாதை மாற்றம் ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துாரில், சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேகம், பிப்., 11ல் நடக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar