Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்துமாரியம்மன் கோயில் வருஷாபிஷேக ... கனகதாசர் ஜெயந்தி: தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு கனகதாசர் ஜெயந்தி: தலையில் தேங்காய் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மடப்புரத்தில் ஆக்கிரமிப்பால் பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
மடப்புரத்தில் ஆக்கிரமிப்பால் பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

25 டிச
2017
12:12

திருப்புவனம் : திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பெருகி வரும் ஆக்கிரமிப்பால் பக்தர்களும் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். திருப்புவனம் அருகே மடப்புரத்தில் புகழ் பெற்ற பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. கேட்ட வரம் தருபவள், தவறு செய்பவர்களை தண்டிப்பவள் என்பதால் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். மடப்புரம் காளியை சாந்தப்படுத்த பக்தர்கள் எலுமிச்சை மாலை அணிவித்து வழிபடுவது வழக்கம். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் பெண்கள் கூட்டம் அலைமோதும், இதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுவது வழக்கம், கோயிலுக்கு வரும் பக்தர்களை நம்பி கோயில் வாசலின் இருபுறமும் எலுமிச்சை மாலை, தேங்காய், பழம், சூடம், பொரி உள்ளிட்டவைகளை விற்பனை செய்யும் கடைகள் அமைந்துள்ளன.

கோயில் வாசலில் ஏராளமான கடைகள் அமைத்துள்ளனர். பக்தர்கள் செல்ல முடியாதபடி அமைந்திருக்கும் கடைகளால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க கோயில் சுவற்றை ஒட்டி அமைந்துள்ள கடைகளை அகற்ற கோயில் நிர்வாகம் உத்தரவிட்டது. கடைகளை காலி செய்த வியாபாரிகள் கோயில் எதிரே ஆக்கிரமித்து வரிசையாக கடைகளை அமைத்து விட்டனர். இரண்டு அடுக்குகளாக கடைகள் வரிசையாக அமைந்திருப்பதால் பஸ்கள், வாகனங்கள் செல்ல முடியாதபடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பஸ்களில் இருந்து பக்தர்கள் ஏறவும் இறங்கவும் முடியாமல் திணறி வருகின்றனர். ரோட்டை ஒட்டி கடைகள் அமைந்திருப்பதால் விபத்து அபாயமும் ஏற்பட்டு வருகிறது. இரண்டு பஸ்கள் தாராளமாக செல்லும் இடத்தில் தற்போது ஒரு பஸ் கூட செல்ல முடியவில்லை. எனவே மடப்புரத்தில் ரோட்டை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றி போக்குவரத்து சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar