பதிவு செய்த நாள்
02
ஜன
2018
12:01
நாமக்கல்: நாமக்கல்லில், ஏராளமான பக்தர்கள் ஆஞ்சநேயரை வழிபட்டனர். ஆங்கில புத்தாண்டு பிறப்பான நேற்று, நாமக்கல், கோட்டை சாலையில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில், ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதிகாலை, 4:00 மணிக்கு, கோவிலில் நடை திறக்கப்பட்டு, வடை மலை சாற்றப்பட்டது. தொடர்ந்து தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்டவையால், சிறப்பு அபி ?ஷகம் செய்து, வெற்றிலை மாலையுடன் தீபாராதனை நடந்தது. காலை, 6:00 மணிக்கு சுவாமிக்கு தங்கக் கவசம் சாற்றப்பட்டது. அதிகாலையில் இருந்தே, நீண்ட வரிசையில் காத்திருந்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.